ரயில்வே வாரியம் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில் இயக்கம் .... ரயில்வே வாரியம் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களை பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்கின்றனர். பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை சந்திக்கவும் அதிக அளவில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இதனால், பொது போக்குவரத்து வாகனங்களில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கான முன்னேற்பாடு பணியாக கூடுதலான எண்ணிக்கையில் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதையடுத்து இந்த நிலையில், டிசம்பர் 25ம் தேதி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே வாரியம், சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. எனவே அதன்படி, டிச.22ம் தேதி தாம்பரம் – நெல்லை இடையே இரவு 9 மணிக்கும், அதேநாளில் எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே இரவு 11:20 மணிக்கும், டிச.23ம் தேதி நெல்லை – சென்னை எக்மோர் இடையே பிற்பகல் 1 மணிக்கும்,

அதனைத்தொடர்ந்து அதே நாளில் சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் இடையே டிச. 23ம் தேதி பிற்பகல் 2:50 மணிக்கும், தாம்பரம் – நாகர்கோயில் இடையே டிச.23ம் தேதி இரவு 7:30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.