சியோலில் ஹலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி இலங்கையை நபர் பலி

இலங்கை: தென்கொரிய தலைநகர் சியோலில் ஹலோவீன் நிகழ்வின் போது கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.