கொளத்தூர் தேர்தல் வழக்கின் சூழல் மாறினால் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட முடியாது: முதலமைச்சர் தகவல்

சூழல் மாறினால் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட முடியாது... கொளத்தூர் தேர்தல் வழக்கின் சூழல் மாறினால் ஆறு ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார் அவரை எதிர்த்து அதிமுகவின் சைதை துரைசாமி களம் கண்டார். அந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த வெற்றிக்கு எதிராக சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் சூழல் மாறினால் ஸ்டாலின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதே போல் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார் என்றும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் தான் துரைக்கண்ணுவும் அனுமதிக்கப்பட்டு இருந்தார், அப்படியென்றால் கருணாநிதி இறப்பிலும் மர்மம் உள்ளதா என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா இறப்பில் கூட அரசியல் பார்ப்பதா என முதலமைச்சர் காட்டமாக பேசியுள்ளார்.