புயல் காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிவர் புயலாக உருமாறி சென்னைக்கு தென்கிழக்கே 450கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிவர் புயல் காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.