புத்தாண்டில் சாலை விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

சென்னை: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். எதற்கு தெரியுங்களா?

சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் வருகிற 29ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிக்காட்டுதல்கள் குறித்து அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்