தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 35 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 301 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 177 செங்கல்பட்டு - 1,573 சென்னை - 11,425 கோவை - 3,752 கடலூர் - 939 தர்மபுரி - 758 திண்டுக்கல் - 328 ஈரோடு - 916 கள்ளக்குறிச்சி - 295 காஞ்சிபுரம் - 656 கன்னியாகுமரி - 670 கரூர் - 294 கிருஷ்ணகிரி - 691 மதுரை - 736 நாகை - 508 நாமக்கல் - 804 நீலகிரி - 441 பெரம்பலூர் - 83 புதுக்கோட்டை - 321 ராமநாதபுரம் - 171 ராணிப்பேட்டை - 248 சேலம் - 1,938 சிவகங்கை - 160 தென்காசி - 149 தஞ்சாவூர் - 460 தேனி - 226 திருப்பத்தூர் - 284 திருவள்ளூர் - 1,345 திருவண்ணாமலை - 578 திருவாரூர் - 507 தூத்துக்குடி - 503 திருநெல்வேலி - 472 திருப்பூர் - 1,108 திருச்சி - 603 வேலூர் - 647 விழுப்புரம் - 525 விருதுநகர் - 175 விமானநிலைய கண்காணிப்பு - 14