விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 2 மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த வகையில், ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனுப்பி வைத்தார்.

மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரின் முன்மொழிவை பரீசிலித்து, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.