தமிழகத்தில் சாதாரண, சன்னரக நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை நாளை முதல் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 50,000 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100ம் கூடுதல் ஊக்கத்தொகையாக நாளை முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-2022 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதே போன்று இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு ஒன்றை செய்துள்ளது.

அதன் படி ஒன்றிய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 எனவும் நிர்ணயம் செய்துள்ளது. இதே போல் தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 எனவும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 எனவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தமிழக அரசின் இந்த ஊக்கத்தொகையை நாளை முதல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.