ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டம்.

சென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டம் ...

இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து அதன்படி தமிழகம் முழுவதும் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்வுகளை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.