மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள், குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை: பிளாஸ்டிக் தடையை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியங்களும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. மக்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும் அதாவது ஆழ்கடல் பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை அடுத்து இந்த பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள், குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான இந்த குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.