வரும் 14ம் தேதி 19வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை

புதுடில்லி: 19வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை... இந்தியா சீனா இடையிலான ராணுவத் தளபதிகளின் 19வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் சீனப் படைகளைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினையால் இருநாட்டு உறவுகளும் சேதம் அடைந்துள்ளன.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஏப்ரல் 23ம் தேதி இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நான்கு முறை படைக்குறைப்புக்கு சீனா ஒப்புதல் அளித்த போதும் இன்னும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அசல் எல்லைக் கோடு அருகில் குவிக்கப்பட்டுள்ளனர்.