5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வந்தது

மத்திய அரசு அறிவித்த 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

மத்திய அரசு அறிவித்த 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் சில இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதில் திரிபுராவில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்று முதல் கூடுதல் நேரத்திறகு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மகாராஷ்ட்ராவில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் உணவகங்கள், பார்கள் திறக்கப்படுகின்றன. பெங்களூரில் மூடப்பட்டிருந்த இஸ்கான் கிருஷ்ணர் கோவில் மீண்டும் திறக்கப்படுகிறது.

பல்வேறு மாநிலங்கள் இன்று தளர்வுகளை அமுல்படுத்த உள்ள நிலையில், ஊரடங்குத் தளர்வுகளுக்கான வழிகாட்டல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.