பாஜக மாநில தலைவர் இன்று பிற்பகல் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை .... தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ரவியை சந்தித்து கோரிக்கை ஒன்றை விடுத்தார்.

இந்த நிலையில் ஆளுநர் ரவியை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார். இன்று மாலை 3 மணி அளவில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அடங்கி கோப்புகளை வழங்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


மேலும் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கையும் ஆளுநரிடம் அண்ணாமலை வழங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

டிஎம்கே பைல்ஸ் 2 என்ற ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்த நிலையில், இன்று ஆளுநரை சந்திக்க உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.