பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கடும் சண்டையானது

இங்கிலாந்தில் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கடும் சண்டையாக மாறியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவன்ட்ரி சிட்டி சென்டர் என்ற இடத்தில் சில பெண்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒருவர், மற்றொரு பெண்ணை கீழே தள்ளி அடித்து உதைத்தார்.

இதில் ஒருவரின் தலை அருகில் இருந்த பேருந்தில் மோதியதில் காயமேற்பட்டது. கீழே விழுந்தவருக்கு ஆதரவாக வந்த பெண்கள், தாக்கியவரை அடித்துத் துவைத்தனர்.

சில நிமிட சண்டைக்குப் பின்னர் அவர்கள் தாங்களாகவே விலகிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.