தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்து பாராட்டினார் தமிழக ஆளுனர்

சென்னை: ஆளுநர் பாராட்டினார்... தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மறைக்கப்பட்ட கொடூரமான உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்துள்ளது. பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று கூறி தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்துவிட்டனர். இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில் தி கேரளா ஸ்டோரி படத்தை தனது மனைவியுடன் பார்த்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கவர்னர் ரவி, கொடுமையான உண்மையை அம்பலப்படுத்திய படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.