சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள் இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை மிக சிறப்பாகக் கொண்டாடக்கூடிய வகையில், இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எனவே அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி
மேலும் தமிழகமெங்கும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஆகஸ்டு (13.8.2022) முதல் 15.8.2022 வரை, அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இதை அடுத்து அதன்படி, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் இன்று (13.8.2022) இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.