ஆவின் பால் கொள்முதல் விலை இந்தாண்டு அதிகரிக்கப்படும் என அமைச்சர் உறுதி

கன்னியாகுமரி: ஆவின் பால் கொள்முதல் விலை இந்தாண்டு அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலையை அரசு இந்தாண்டு அதிகரிக்க இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆவின் மூலம் வாடிக்கையாளருக்கு தரமான பாலை குறைவான விலையில் கொடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

முன்னதாக, புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.