தீவிரவாதத்தை உலகநாடுகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்

இந்தோனேசியா: தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று இந்தோனேசியாவில் நடந்த ஆசியான் அமைப்பு நாடுகள் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உலக நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

மாநாட்டில் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் இது போருக்கான காலம் அல்ல என்றும், உலகில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையும் நாடுகளுக்கிடையே இணக்கமான சூழல் நிலவுவதும் அவசியம் எனவும் தெரிவித்தார்.