பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தை கடந்தது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தற்போது, பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் 2,75,226 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் நேற்று 936 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தானில் ஒரே நாளில் 23 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர். இதனால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.