கொரோனாவால் இலங்கையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1094 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1094 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,094 ஆக அதிகரித்துள்ளது.