சிவமொக்காவில் விமான நிலைய திறப்பு நாளை மறுநாள் நடக்கிறது

பெங்களூரு: நாளை திறப்பு விழா... சிவமொக்கா நகரை ஒட்டியுள்ள சோகனே பகுதியில் ரூ. 442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சோகனே பகுதியில் பிரமாண்ட மேடை கட்டும் பணி நடந்து வருகிறது.

சோகனே விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று கலெக்டர் செல்வமணி, போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.