ஒட்டாவா சிறைக்கைதிகளின் உண்ணாவிரதம் முடிவடைந்தது

கைதிகள் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது... ஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்த்து, 14 கைதிகள் புதன்கிழமை காலை ஒட்டாவா-கார்லேடன் தடுப்பு மையத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

கைதிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 14 கைதிகளும் அதிகபட்ச பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.