புதுச்சேரி ஊசுட்டேரி நிரம்பியது; சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

கடல்போல் நிரம்பிய ஏரி... கனமழையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் புதுச்சேரி ஊசுட்டேரியின் அழகை படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரிக்கு பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.

கடந்த 9 மாதங்களாக வறண்டு கிடந்த ஊசுட்டேரி அண்மையில் பெய்த கனமழை காரணமாக முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊசுட்டேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், படகுகளில் சென்று ஏரியின் அழகையும் பறவைகளையும் கண்டுகளித்தனர்.