வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி , அவர்களிடமிருந்த பதற்றம் தணிந்துள்ளது .. டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, வடமாநில தொழிலாளர் பற்றி வதந்தியான செய்திகள் பல பரவிய நிலையில்,இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகிவுள்ளது. மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தியான செய்தி பரப்பியவர்கள் மீது தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக தொழில்துறையுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை காவல் ஆணையர், 8 மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் தங்களது ஊருக்கு சென்றுள்ளனர் என அவர் கூறினார்.