கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67.78 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.78 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 78 லட்சத்து 53 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை மற்றும் 65 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மற்றும் 67 லட்சத்து 84 ஆயிரத்து 76 பேர் உயிரிழந்துள்ளனர்.