அமெரிக்க அதிபரின் மனைவிக்கு மீண்டும் லேசான கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் ஜோ பைடனுக்கு இந்த பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.