கெய்ரோ: வாகனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவால் பல்வேறு வாகனங்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்துள்ளது.
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதிக் கொண்ட விபத்தில் 32பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 3பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாகனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவால் அந்த வழியாக சென்ற பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததே ஏராளமான வாகனங்களின் மோதலுக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
பெஹெரா கவர்னே பகுதியில் உள்ள முக்கிய பாலைவன சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.