பிரதமர் தேசிய கொடி ஏற்றும் வீடியோவை தற்போது வரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்

புதுடெல்லி: நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து இச்சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் மிகவும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது.

இதனை அடுத்து தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, பின் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் பிரதமர் மோடி ஆற்றிய உரை உலகளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. பிரதமர் மோடி நேற்று செங்கோட்டைக்கு கம்பீரமாக வந்து முப்படைகளின் மரியாதையை ஏற்ற வீடியோவும் , இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய வீடியோவும் யூடியூப்பில் முதல் இரண்டு டிரெண்டிங் வீடியோக்களாக இன்று இருந்தன.

மேலும் பிரதமரின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் தேசிய கொடி ஏற்றும் வீடியோவை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதை தவிர பிரதமர் மோடி செங்கோட்டையில் குழந்தைகளுடன் உரையாடுவது குறித்த வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.