மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 105 அடியை கடந்துள்ளது

சேலம்: கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாகவே நீர்வரத்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி மட்டும் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது.

இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5.37 அடி உயர்ந்து 105.81 அடியை கடந்துள்ளது.

நீர் இருப்பு 75.57 டிஎம்சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 98.208 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.