பிரிட்ஜில் இருந்த பெண் சடலம்... பிரான்சில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

பிரான்ஸ்: பிரிட்ஜில் இருந்த பெண் சடலம்... பிரான்சில் பிரிட்ஜ் ஒன்றை குப்பைமேட்டில் வீசுவதற்காக தனது நண்பர்கள் இருவரின் உதவியை நாடிய நிலையில் அதற்குள் பெண் ஒருவரின் சடலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டவர் ஒருவர். தெற்கு பிரான்சிலுள்ள Mandelieu-la-Napoule என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த டென்மார்க் நாட்டவரான அந்த நபர், தனது குளிர்சாதன பெட்டி ஒன்றை குப்பைமேட்டில் வீச தன் நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர்கள் அந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து துர்நாற்றம் வருவதை கவனித்து, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்க, தான் தனது நாயைக் கொன்றுவிட்டதாகவும், அதை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.

இதனையடுத்து நண்பர்கள் இருவரும் ஃப்ரிட்ஜைத் திறக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்த, அதற்குள் ஒர் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்த நிலையில், உடனே அவர்கள் பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்கள்.

பொலிசார் வந்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப, அது அந்த நபரின் மனைவி என்பதும், அந்தப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பொலிஸார் , அந்த நபர் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ஏராளம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் ஒரு நாய்க்குட்டியின் உடல் ஆகியவை இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த பொலிசார் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.