பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

பள்ளிப்படிப்புக்கு பிறகான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பை வழங்க வேண்டும்.

தமிழக அரசு உயர்கல்விக்கு 2110.90 கோடி ரூபாய் செலவிடுகிறது. முழுத்தொகையையும் செலுத்த வேண்டுமென்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். மத்திய அரசு 584.44 கோடி ரூபாய் நிதியை மட்டுமே அளித்துள்ளது. பட்டியலின மாணவர்களுக்கான நிதியை குறைக்கக் கூடாது எனத் தெரிவிதுள்ளார்.