ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் நேருவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகழாரம் சூட்டி உள்ளனர். அவரது முக்கியமான புகைப்படங்களையும் பகிர்ந்துவருகின்றனர்.

நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான செய்தியையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.