இங்கு நாளை உள்ளூர் விடுமுறை

:,தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்கள் அறிவிப்பார்கள்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயத் தேர்திருவிழா வருகிற மார்ச் 7 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

அதனால் அன்றைய தினம் தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி மற்றும் அஞ்செட்டி போன்ற வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 18 -ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் உள்ளூர் விடுமுறை அன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்க, குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.