இந்தோனேசியாவில் இன்று இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வெகுவாக அச்சம் அடைந்தனர்.

இந்தோனேசியாவின் கெபுலாவான் பது என்ற இடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

சில மணி நேரம் கழித்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது