இவர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு துணையாக இருக்கும் .. உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் .... தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ளதாவது,

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய டி-20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்ற, தமிழ்நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்களை இன்று நேரில் வாழ்த்தி நினைவுப்பரிசினை வழங்கினோம்.


மேலும், கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள செவி மாற்றுத்திறனாளிகளுக்கான #T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள தம்பிகள் சுதர்சன் மற்றும் சாய் ஆகாஷ் ஆகியோருக்கு

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து தலா ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினோம். மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு எனவும் உறுதுணையாக இருக்கும் யவ்ன அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.