மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அலுவலகத்திற்கு வந்த கொலை மிரட்டல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் உள்ள கட்கரியின் அலுவலகத்திற்கு இன்று காலை 3 கொலை மிரட்டல் அழைப்புகள் வரப்பெற்றதாக தெரிவித்துள்ள நாக்பூர் குற்றப்பிரிவு டிசிபி ராகுல்மதனே, மிரட்டல் விடப்பட்ட தொலைபேசி எண்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், நாக்பூர் அலுவலகம் மற்றும் அமைச்சரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் மற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ராகுல்மதனே கூறினார்.