ஒரு வாரம் விடுமுறை... களனி பல்கலைக்கழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை (திங்கட்கிழமை) முதல் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம்
தவணைக்கான விடுமுறை நாளை முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து
பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல்
வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கம்பஹா
மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.