தொழில்சங்க தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தல்

கொழும்பு: எம்.பி., வலியுறுத்தல்... தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வளத்தை காக்க போராடிய தொழிற்சங்க தலைவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை தவறான முன்னுதாரணமாகும் என அவர் கூறியள்ளார்.

எனவே, தன்னிச்சையாக செயற்படுவதை அமைச்சர் கஞ்சன நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.