இம்பாலில் மீண்டும் வெடித்தது வன்முறை... ஊரடங்கு அமல்

இம்பால்: மீண்டும் ஊரடங்கு... மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலின் சாக்கோன் பகுதியில் சந்தையில் ஒன்றில் இடம் பிரச்சினை தொடர்பான தகராறு மெய்தாய் மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே மோதலாக வெடித்தது.

இது தீவிரமடைந்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கு இடையே மோதல் மூண்டதாகவும், தீ வைப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.