நைரோபியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

கென்யா: விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தைக் கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

சில இடங்களில் சாலைகளின் குறுக்கே போராட்டக்காரர்கள் டயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தியதால் போக்குவரத்து தடைபட்டது. இதனிடையே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.