கொச்சி முதல் வாட்டர் மெட்ரோ படகு சேவை இன்று முதல் தொடங்கியது

கொச்சி: முதல் சேவை தொடங்கியது... கேரள மாநிலம் கொச்சியில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ படகு சேவையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில், அதன் முதல் சேவை இன்று தொங்கியது.

ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன், 747 கோடி ரூபாய் செலவில் கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பெட்டிகளில் உள்ள அனைத்து வசதிகளும் வாட்டர் மெட்ரோவிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டர் மெட்ரோ சேவை கொச்சியில் உயர் நீதிமன்றம் மற்றும் வைப்பின் வாட்டர் மெட்ரோ டெர்மினல்கள் மற்றும் வைட்டிலா-காக்கநாடு வழித்தடத்தில் தொடங்கியுள்ளது.