100 சதவீதம் பாதுகாப்புடன் புயலை கடந்திருக்கிறோம்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

100 சதவீதம் பாதுகாப்புடன் புயலை கடந்திருக்கிறோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிகர் புயல் கரையை கடந்துள்ளது. 100 சதவீதம் பாதுகாப்புடன் புயலை கடந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

புயல் கரையை கடந்த பின்பும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.