ராகுலை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை... முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி

மதுரை: ஏன் முன்மொழியவில்லை... பாட்னா கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழியாதது ஏன் என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த மு.க.ஸ்டாலின், பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி குறித்து எதுவுமே பேசாதது ஏன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜூ, கூட்டத்தின் தலைவர் யார் என்பது தான் கேள்வியாக இருந்த நிலையில் அதற்கு முடிவு காணாமல் கூட்டம் முடிந்துள்ளதால் அந்த கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லையெனவும் கூறினார்.