4.33 கோடியாக உயர்வு... கடந்த 24 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடியாக உயர்ந்துள்ளது.
முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. கொரோனாக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இன்னும் உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக உள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 749 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து
636 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 59
ஆயிரத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
பட்டியல்: அமெரிக்கா - 8,889,179, இந்தியா - 7,909,050, பிரேசில் -
5,394,128, ரஷியா - 1,513,877, பிரான்ஸ் - 1,138,507, ஸ்பெயின் -
1,110,372, அர்ஜென்டினா - 1,090,589, கொலம்பியா - 1,015,885, மெக்சிகோ -
891,160, பெரு - 888,715, இங்கிலாந்து - 873,800, தென்னாப்பிரிக்கா -
715,868.