கேரளாவில் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு

கேரளா: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை ...அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வருகிறது.

கனமழை கொட்டி வரும் மாவட்டங்களில் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே இதன் காரணமாக நேற்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் ,மலப்புர்ம், கோழிக்கோடு , வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்டு 8 மாவட்டங்களில் நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் தொடரும் கனமழையின் காரணமாக பத்தனம்திட்டா, ஆலப்புழா , எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.