ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு மரம் முறிந்து காயமடைந்த இளைஞர்கள்

கேரளா: கேரளாவில் ரீல்ஸ் செய்வதற்கு ஆசைப்பட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொண்ட இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னை மரத்தில் ஏறி மரம் முறிந்து விழுந்து காயமடைந்துள்ளனர்.

மலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட காளி காவு பகுதியில் இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் செய்வதற்கு ஆசைப்பட்டு, வளைந்திருந்த தென்னை மரத்தின் மீது வரிசையாக அமர்ந்திருந்தனர்.

இதில் கடைசியாக அமர்ந்திருந்த நபர், மரத்தை ஆட்டுவதற்காக லேசாக அசைத்தார். அடுத்த சில நொடிகளில் எதிர்பாராதவிதமாக தென்னை மரம் முறிந்து விழுந்தது.

கணநேரத்தில் மரத்தின் மீதிருந்த அனைத்து இளைஞர்களும் தண்ணீருக்குள் விழுந்தனர். தண்ணீர் என்பதால் விழுந்த இளைஞர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.