சுவீடன் மந்திரியாக இளம் பெண் ரோமினா நியமனம்

சுவீடன்: இளம் பெண் மந்திரியாக நியமனம்... சுவீடன் காலநிலை மந்திரியாக 26 வயது இளம்பெண் ரோமினா போர்மக்தாரி நியமனம் செய்யப்பட்டார்.


சுவீடன் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், வலது சாரி ஜனநாயக கட்சியின் ஆதரவோடு உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அங்குள்ள மாடரேட் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் லிபரெல் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் இந்த புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது.

தொடர்ந்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையில் சுவீடன் அரசின் மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில் லிபரெல் கட்சியின் இளைஞர் அணி தலைவரான 26 வயது இளம்பெண் ரோமினா போர்மக்தாரி, அந்நாட்டின் காலநிலை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் சுவீடன் நாட்டின் மிக இளம் வயது மந்திரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ரோமினாவின் குடும்பம் ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், அவர் சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் பிறந்தவர் ஆவார். சிறுவயதில் இருந்தே லிபரெல் கட்சியின் இளைஞர் அமைப்பில் செயல்பட்டு வந்த இவர், கடந்த ஆண்டுகளில் உல்ஃப் கிறிஸ்டெர்சனின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனமும் செய்துள்ளார்.