Advertisement

தயிரை பயன்படுத்தி சரும பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்யலாம்

By: Nagaraj Tue, 06 June 2023 8:05:44 PM

தயிரை பயன்படுத்தி சரும பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்யலாம்

சென்னை: நம் வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடியது தயிர். தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், மிகவும் குளிர்ச்சி தன்மையுடையது. அதுமட்டும் இல்லாமல் தயிர் (curd beauty tips) பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு இயற்கை பொருளாக விளங்குகிறது.

முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு: சிலருக்கு சருமத்தில் அதிகளவு பருக்கள் இருக்கும், அவற்றை சரி செய்வதற்கு தயிர் மிகவும் சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது. எனவே சருமத்தில் அதிகளவு பருக்கள் ஏற்பட்டால் தயிரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் ஏற்பட்டுள்ள பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும், அதேபோல் பருவினால் ஏற்பட்டுள்ள தழும்புகளும் மறைந்துவிடும்.

skin,lustrous,dark complexion,changeable,curdled,cold ,சருமம், பொலிவு, கருமை நிறம், மாறும், தயிர், குளிர்ச்சி

கருமையான சருமத்திற்கு தயிர்: சிலருக்கு சூரிய காலத்தில் சருமம் பொலிவை இழந்து, சருமம் மிகவும் கருமையாக காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சருமத்தில் ஒரு பேக்காக போடவும், பின்பு 20 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறம் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.

Tags :
|