Advertisement

மேக்கப் செய்வதை இந்த மாதிரி சமயங்களில் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்!

By: Monisha Tue, 17 Nov 2020 3:08:38 PM

மேக்கப் செய்வதை இந்த மாதிரி சமயங்களில் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்!

பெண்களே நீங்கள் சில குறிப்பிட்ட நேரங்களில் மேக்கப் செய்வதை தவிர்ப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக ஜிம்முக்கு செல்லும்போது மேக்கப்பை தவிர்க்க வேண்டும். அந்த வேளையில் வியர்வை வழிவதால் அதில் இருக்கும் ரசாயன கலவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உடல் உழைப்பை கொண்ட வேலைகளை செய்யும் போதும் மேக்கப் போடுவதை தவிர்த்துக் கொள்வது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.

லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. அதுமட்டுமின்றி சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை நீங்கள் போடப்பட்டிருக்கும் மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடு விளைவிக்கும். இதன் காரணமாக சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

women,makeup,face,beauty,allergies ,பெண்கள்,மேக்கப்,முகம்,அழகு,அலர்ஜி

ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைத்து , சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இது உடலுக்கு நன்மை பயக்கும்.

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமான வரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Tags :
|
|
|
|