- வீடு›
- அழகு குறிப்புகள்›
- ஐஸ் க்யூப்ஸை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுங்களா?
ஐஸ் க்யூப்ஸை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுங்களா?
By: Nagaraj Thu, 07 July 2022 7:53:28 PM
சென்னை: வழக்கமான தோல் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் கழுத்து பகுதி மற்றும் முகம் முழுவதும் ஐஸ் க்யூப்ஸ்களை கொண்டு தேய்ப்பது மிக பெரிய நன்மைகளை அளிக்கும்.
ஆரோக்கிய நோக்கங்களுக்காக உடலின் ஒரு பகுதியில் ஐஸ் பயன்படுத்துவது குளிர் சிகிச்சை அல்லது கிரையோதெரபி என்று அழைக்கப்படுகிறது. ஐஸ் ஃபேஷியல் அல்லது கிரையோ ஃபேஷியல் ஆகியவை தற்போது ட்ரெண்டாகி வரும் சரும பராமரிப்பு முறைகளாக இருந்து வருகின்றன. ஸ்கின் கண்டிஷனை பொருட்படுத்தாமல் முகத்தில் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது உங்கள் முகத்திற்கு பல அற்புதங்களைச் செய்யும்.
முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதால் கிடைக்கும் மிக பெரிய பயன்களில் இது முக்கியமானது. எரிந்த சருமத்தில் ஐஸ் வைக்க வேண்டும் அல்லது ரத்த காயம் இருந்தால் அதில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும் என்று உங்கள் அம்மா சிறிய வயதில் சொன்னதை இங்கே நினைவில் கொள்ளுங்கள்.
ஐஸ் கட்டிகளை சருமத்தில் பயன்படுத்துவது தோல் அழற்சி அல்லது வெயிலுடன்
தொடர்புடைய எரிச்சல் உணர்வை அமைதிப்படுத்தும். உங்கள் ஃபேஸ் மேக்கப்பை
தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் முகத்தில் ஒரு 5 நிமிடங்கள் ஐஸ்
கட்டிகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மேக்கப் மிருதுவாக
இருப்பது மட்டுமின்றி, நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.
மேலும்
முகத்திற்கு ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்துவது சுருக்கங்களை குறைக்க, சூரிய
ஒளியால் சருமத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை குறைக்க மற்றும் முகத்தை
பளப்பளப்பாக்க செய்கிறது. ஐஸ் க்யூப்ஸை தோல் பராமரிப்புக்கு ஒரு துணை
பொருளாக பயன்படுத்த வேண்டுமே தவிர, அவற்றை முழுமையாக சார்ந்து
இருக்காதீர்கள். இறந்த சரும செல்களை அகற்றும். கிரையோ ஃபேஷியல் என்பது
இறந்த சரும செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை முகத்திலிருந்து அகற்றுவது
மட்டுமல்லாமல், புதிதாக விடுவிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற
உதவுகிறது.
முகத்தில் செய்யப்படும் கிரையோ ஃபேஷியலின் போது உறைபனி
வெப்பநிலையை அடைய திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபேஷியல்
தோலின் வெளிப்புற அடுக்கில் இருந்து இறந்த சரும செல்களை முழுவதும் அகற்றும்
என்பதால் கெமிக்கல் பீல்சுடன் ஒப்பிடக்கூடிய பளபளப்பை கொடுக்கும்.
பல
காரணங்களால் கண்களை சுற்றியுள்ள பகுதிகள் வீக்கமடையலாம். ஆனால் இதற்கு
மிகவும் பொதுவான காரணங்கள் தூக்கமின்மை மற்றும் கண் சோர்வு. முகத்தில்
மற்றும் கண்களை சுற்றிய பகுதிகளில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது வீக்கங்களை
குறைக்கும் மற்றும் நிணநீரை உறிஞ்சும்.